மட்டக்களப்பில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளதுடன், 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
கோவிட் வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 11 பேரும், களுவாஞ்சிக்குடியில் 03 பேரும், வாழைச்சேனையில் 08 பேரும், காத்தான்குடியில் 11 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் ஓட்டமாவடியில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி 11 பேரும், செங்கலடி ஒருவரும், ஏறாவூர் 26 பேரும், வாகரை 02 பேரும், பட்டிப்பளை 05 பேரும், ஆரையம்பதி 09 பேரும், வெல்லவெளி 08 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உட்பட்ட 97 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
இதேவேளை கோவிட் தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்ரல் 22 ம் திகதி ஆரம்பித்த
நிலையில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கோவிட் தொற்றால்
58 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.