கோவிட் தொற்றினால் வடமராட்சியில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவரே கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவர் கோவிட் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,மரணமடைந்த நபரது சடலம் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.