பண்டிகை காலங்களில் பொது மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை - வைத்திய கலாநிதி எஸ்.எம் ஆர்னோல்ட்
பண்டிகை காலங்களில் பொது மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை. எனவே கோவிட் தொற்று அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறிவோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி எஸ்.எம் ஆர்னோல்ட் எச்சரித்துள்ளார்.
பொது மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சட்ட விதிகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சகம் தயங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலங்களில் பலரின் பொறுப்பற்ற நடத்தை கவனிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது. இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருந்தாலும், சிலர் சுகாதார வழிகாட்டுதல்களை உரியமுறையில் பின்பற்றவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் கோவிட் தொற்றுநோயின் மூன்றாவது மற்றும் நான்காவது அலைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், இலங்கையை பொறுத்தவரை இதுவரை வெற்றிகரமாக வைரஸைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
இருப்பினும், மக்களின் பொறுப்பற்ற நடத்தை தொடர்ந்தால் கோவிட் தொற்று விரைவாக பரவுவதை தவிர்க்க முடியாதது என்று வைத்திய கலாநிதி ஆர்னோல்ட் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, நாட்டில் சாத்தியமான கோவிட் கொத்தணி உருவாகாமல் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
