கோவிட் தடுப்பூசிகளின் இரண்டாவது அலை தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
கோவிட் தடுப்பூசிகளின் இரண்டாவது அலை சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் உண்மையான நிலைமையை வெளிப்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளின் இரண்டாவது குப்பியை மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை அறிவிக்கவில்லை, இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12 முதல் இரண்டாவது கோவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும் என்று சுகாதார அதிகாரிகள் முன்னர் அறிவித்தனர். எனினும் அவர்கள் அது குறித்து ஒரு தெளிவான அறிக்கையை வெளியிடத் தவறிவிட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி தொடர்பில் சில தெளிவற்ற தன்மைகள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தடுப்பூசியின் முதல் குப்பி அளவை பெற்றவர்கள் மத்தியில் கவலையை உருவாக்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி கொடுக்கப் போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
