மட்டக்களப்பில் வீதிகளில் நடமாடியவர்களை பிடித்து அன்டிஜன் பரிசோதனை - ஒருவருக்கு கோவிட் உறுதி
மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாநகரசபை இணைந்து விசேட வீதிச்சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று முன்னெடுத்த நிலையில் அதில் இருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
தற்போது நாடுபூராக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம், ஊறணி, கூளாவடி பார்வீதி, கொக்குவில், கல்லடி போன்ற பிரதேசங்களில் மக்கள் சட்டத்தை மீறி தேவையின்றி வீதிகளில் நடமாடுவதாகவும், அவ்வாறே அந்த பகுதிகளில் உள்ள பல கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாகச் சுகாதாரத் துறையினர், பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று கூளாவடி மற்றும் பார்வீதி போன்ற பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சட்டத்தை மீறி கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கடைகளை மூடவைத்ததுடன், சில கடைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.
அதேவேளை வீதிகளில் மோட்டார்சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் வாகனங்களில் தேவையின்றி நடமாடியவர்களைப் பிடித்து சோதனை மேற்கொண்டு திருப்பி அனுப்பியதுடன், இருவரைப் பிடித்து கல்லடி கடற்கரையில் உள்ள பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.





விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
