கிண்ணியாவில் கோவிட் - 19 சிகிச்சை நிலையங்களை அமைக்க முயற்சி
கிண்ணியாவில் கோவிட் - 19 தெற்றாளர்களின் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளர். அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, ஈச்சிலம்பற்று போன்ற பிரதேசங்களில் கோவிட் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் அவற்றில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலைமையினை கவனத்தில் கொண்டு கிண்ணியா பிரதேசத்திலும் கோவிட் சிகிச்சை நிலையங்கள் அமைக்கக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரதேசத்திற்குட்டபட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலை விருந்தினர் விடுதி என்பவற்றை மேற்படி நிலையங்களாக மாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமும் தெரிவிப்பதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam