இலங்கையில் இன்று 501 பேருக்கு கோவிட் - 19 தொற்று
இலங்கையில் மேலும் 501 பேருக்கு இன்று கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களாக 750 முதல் 950 பேர் வரையிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
இதேவேளை, கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 647 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 71 ஆயிரத்து 823 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 6 ஆயிரத்து 176 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam