வவுனியாவில் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி
வவுனியாவில் 4 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவருக்கு நேற்றைய தினம் (12.02) கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இன்று (13.02) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் மேலும் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர் முடிவுகளில் வவுனியா பொலிஸார் இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மேலும் 4 பேர் கோவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
