இலங்கையின் கோவிட் நிலவரம்! - மேலும் 21 பேர் பலி
நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 11 ஆண்களினதும், 10 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,505ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து மேலும் 423 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 543,111 ஆக அதிகரித்துள்ளது.