சித்திரவதை செய்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற பொதுமகன் (Video)
இரத்தினபுரி -கிரியெல்ல பகுதியில் வைத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு உட்பட்ட அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உாிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரரான ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த மிஷார ரணசிங்க தமது மனுவின் மூலம், பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கும் குற்றவியல் மற்றும் சித்திரவதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க , பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் துறையில் பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் அறிவிக்கவேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் தாம், இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, ரன்மல் கொடிதுவக்கு உட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் மனுதாரர், தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொதுமகன் ஒருவரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியை அடுத்து அவர் மருத்துவ சேவைகள் மற்றும் நலன்புரிப் பிரிவுகளின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.



ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam