தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் நாளை விசேட அறிவிப்பு
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம்நாளை (01.11.2023) அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31.10.2023) அறிவித்துள்ளது.
ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் கையளித்ததன் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு
முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்ததுடன், நிபுணர் அறிக்கையைப் பெற்ற பின்னர் தமது சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இந்த கோரிக்கையை மேலதிக நீதவான் நிராகரித்துள்ளார். இவ்வாறான விசாரணையில் வெளி தரப்பினர் சாட்சியமளிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்த மேலதிக நீதவான், அதற்கமைய அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
இதன்படி, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ஷாப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், சடலத்தை ஜாவத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
