நீதிமன்ற நடவடிக்கைகள் வரையறுக்கப்படுமென அறிவிப்பு
நீதிமன்ற நடவடிக்கைகள் வரையறுக்கப்படும் என நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக எதிர்வரும் வாரத்தில் நீதிமன்றின் செயற்பாடுகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், நீதவான் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நிலைமைகளை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றின் உள்ளேயும் ,வெளியேயும் சமூக இடைவெளியை பேணக் கூடிய வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
மிகவும் அத்தியாவசியமான வழக்கு விசாரணைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.