பிரமிட் நிதிமோசடியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரமிட் நிதிமோசடியைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு(Colombo) பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் திலிண கமகே, பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரமீட் நிதி மோசடி தொடர்பில் தற்போதைக்கு ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
பிரமீட் நிதி மோசடி
இந்நிலையில், குறித்த மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதத்திற்குள்ளாக அதனை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் அவர் நேற்று (18) பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான நிதிமோசடி சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் முக்கிய பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டிய நீதவான் திலிண கமகே, மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri