அனுரகுமாரவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
கோட்டை தொடருந்து நிலைய பகுதியில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பேரணிக்கு கோட்டை நீதவான் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டில்வின் சில்வா உள்ளிட்ட 6 பேர் இன்று (31.07.2023) மதியம் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பு பிரதேசத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போராட்டங்களை நடத்த தடை
கோட்டை பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தேசிய மக்கள் சக்தி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள வீதிகள்
ஜனாதிபதியின் செயலகம் ஜனாதிபதி மாளிகை,
நிதி அமைச்சு மத்திய வங்கி, பொலிஸ் தலைமையகம்,
கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து CTO சந்திப்பு வரையான ஒல்கொட் மாவத்தை
CTO சந்திப்பிலிருந்து செராமிக் சந்தி NSA சுற்றுவட்டம் வரையான லோட்டஸ் வீதி யோர்க் வீதி வங்கி மாவத்தை
செதம் மாவத்தை முதலிகே மாவத்தை பரோன் ஜயதிலக மாவத்தை
பொலிஸ் தலைமையகம் எதிரில் பாலதாக்ச மாவத்தை
சைத்யா வீதி ஜனாதிபதி மாவத்தை
காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டம் வரையான காலி வீதியுடன் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட காலிமுகத்திடல் வளாகம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |