சனத் நிஷாந்தவின் வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெப்ரவரி 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (31.1.2024) வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம்
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரியலால் சிறிசேன, விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதிவாதியான சனத் நிஷாந்த தற்போது இறந்து விட்டதால், அவமதிப்பு மனுக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக எதிர்வரும் 2 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |