டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதேவேளை குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
விசாரணை தினத்தில் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பான காரணங்களை தெரிவிக்குமாறு டயனா கமகேவுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
வெளிநாட்டு பயணத்தடை
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.