மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிரான மனு விவகாரம்! நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகாித்துள்ளது
இந்த மனுவை தென்மாகாண முன்னாள் ஆளுநா் ரஞ்சித் கீா்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்திருந்தாா்.
மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்தை ரத்துச்செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே அவர் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடா்பில், விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் மனுதாரா் கோாியிருந்தார்.
எனினும் இது தொடா்பில் சட்டமா அதிபாின் சமா்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகாித்தது.