திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் இன்றைய தினம் (18.05.2023) முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவிருந்த நிலையில் அதற்கு திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் கே பியரன்ன தொடுத்த வழக்கின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாபெரும் நினைவுகள்
இதன் அடிப்படையில் இன்று (18.05.2023) திருகோணமலை சிவன் கோயிலுக்கு அருகில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுகாதார நிலைமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை தமிழர் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம் ஆசிரியர் உட்பட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் உட்பட 13 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 32 நிமிடங்கள் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
