பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு எதிராக 20 மாணவிகள் உட்பட 40 பேர் சாட்சி

Sri Lanka Police Ceylon Teachers Service Union Crime Branch Criminal Investigation Department Crime
By Bavan Jul 31, 2023 02:24 PM GMT
Report

ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணைக்கு 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி சாட்சியளித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (31.07.2023) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் வழக்கு எடுக்கப்பட்ட போது மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையாகி மூடிய நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட ஆசிரியரை அடையாளம் காட்டியதையடுத்து ஏனைய சாட்சிகளை எதிர்வரும் 2 ம் திகதி முன்னிலைமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பித்து வந்த 55 வயதுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் கடந்த 2019 ம் ஒக்டோபர் 19 ம் திகதி 19ம் அங்கு கல்வி கற்று வந்த 7 ம் வகுப்பு மாணிகளின் வகுப்பறையில் கற்பிக்க சென்ற நிலையில் மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து பாலியல் சேட்டை மற்றும் தகாதவார்த்தை பிரயோகம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளார்.

பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு எதிராக 20 மாணவிகள் உட்பட 40 பேர் சாட்சி | Court Against Teacher Harassed Students

பாலியல் சேட்டை

இந்த நிலையில் அவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் செய்த முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மேலதிக விசாரணையின்றி இருந்து வந்துள்ள வழக்கை விசேட விசாரணை எடுத்து விசாரணை செய்யுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டு சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை பிறப்பித்தார்.

குறித்த வழக்கு விசேட விசாரணைக்காக நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து அங்கு குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர், அவருக்கு எதிராக சாட்சியப்பதற்காக 29 மாணவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியைகள், அப்போது கடமையாற்றிய அதிபர் உட்பட 40 பேர் சாட்சியமளிக்க முன்னிலையாகியிருந்தனர்.

பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு எதிராக 20 மாணவிகள் உட்பட 40 பேர் சாட்சி | Court Against Teacher Harassed Students

இதன் போது ஆசிரியர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகாததையடுத்து சாட்சிகளை சாட்சியமளிக்க ஏற்பாட்டையடுத்து திறந்த நீதிமன்லில் இருந்து வழக்காளிகள் சாட்சிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு மூடிய நீதிமன்றில் 3 மாணவிகள் ஒருஆசிரியர் உட்பட 4 பேர் சாட்சியமளித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை அடையாளம் 

அதில் சாட்சியமளித்த 3 மாணவிகள் தற்போது சாதாரண கா.பொ.தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்த கால பகுதியில் மாணவிகளின் முதுகில் கையால் அடிப்பது மற்றும் தகாதவார்தை பிரயோகம் கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காண்பிப்பது உடலில் தொட்டு பேசி பாலியல் சேட்டை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக வகுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சாட்சியமளித்ததுடன் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை அடையாளம் காட்டினர்.

பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியருக்கு எதிராக 20 மாணவிகள் உட்பட 40 பேர் சாட்சி | Court Against Teacher Harassed Students

இதனை தொடர்ந்து வகுப்பறை ஆசிரியர் சாட்சியளிக்கும் போது அந்த கால பகுதியில் குறித்த வகுப்பறை ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ள போது மாணவிகள் ஆங்கில ஆசிரியர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு செய்வதாகவும் கையால் முதுகில் அடிப்பதாகவும் வாடி போடி என பேசுவதாகவும் அவரை மாற்றுமாறும் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதனை தொடாந்து அவர் கையால் அடிக்க கூடாது என பிரம்பு வாங்கி கொடுத்தும் அவர் கையால் அடித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதி அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் அதிபர் என்னிடம் விசாரித்த போது நடந்தவைகளை தெரிவித்ததையடுத்து பாடசாலை ஆசிரியர் ஒழுக்க குழுவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் குறித்த வகுப்பறைக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை செய்து அறிக்கை தயாரித்து சென்றனர் என சாட்சியளித்து அசிரியரை அடையாளம் காட்டினர்.

சாட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த ஆசிரியரிடம் குறுக்கு விசாரணை செய்த போது அதற்கு அவர் எதுவித பதிலும் அளிக்காது மௌனமாக இருந்துள்ள நிலையில் ஏனைய சாட்சிகள் எதிர்வரும் 2ம் திகதி சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறும் என அறித்ததையடுத்து மூடிய நீதிமன்றம் கலைந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US