நாட்டை திறப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
எதிர்வரும் வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இது தொடர்பான இறுதி முடியு வழங்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
நாட்டை திறப்பதென்றால் அதற்கான வழிக்காட்டல் பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி, கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய பரிந்துரைகளுக்கமைய நாட்டை நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. சுகாதார வழிமுறைகளின் கீழ் சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam