நாடு திவாலாகும் நிலையில் இல்லை - மத்திய வங்கியின் ஆளுனர் - செய்திகளின் தொகுப்பு (Video)
நாடு திவாலாகும் நிலையில் இல்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மீண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,