கோவிட் அபாய பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நாடுகள்: புதிய பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பு
கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கோவிட் அபாய பகுதியாக அறிவித்துள்ளதுடன், அவற்றிற்கு புதிய பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி பெறாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பயணிக்க அனுமதியுள்ள மக்கள் பட்டியலிலிருந்து கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆகவே, ஒமிக்ரோன் வகை மரபணு மாற்றக் கோவிட் வைரஸ் பரவல் அதிகம் காணப்படும் மேற்கூறப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி பெறாதோருக்கான பயணக்கட்டுப்பாடுகள் நேற்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கனடா, அர்ஜென்டினா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகச் செல்வதற்குத் தொடர்ந்து தடை விதிப்பதைப் பரிந்துரைப்பதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தின நிலவரப்படி, கனடாவில் 48,964 பேர் புதிதாக கோவிட் தொற்றுக்கு
ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.