ஆயிரக்கணக்கான புகார்கள்! திணறும் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு
இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில், இரண்டாயிரத்திற்கும் அதிகமான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனவரி 1, 2025 முதல் மே 31, 2025 வரை 2,138 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைகள்
2024 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள புகார்கள் உட்பட, தற்போது ஆணைக்குழுவிடம் உள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கை 2,221 ஆகும்.

இவற்றில், 224 புகார்கள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் 524 புகார்கள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் விசாரிக்கப்படாமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் கடந்த 05 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 282 புகார்கள் விசாரணைக்காக பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam