பிரபல சுற்றுலா விடுதியொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமொன்று மீட்பு
நீர்கொழும்பு - குடாப்பாடு பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விடுதியிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு குடாப்பாடு லுவீஸ்பிலேஸ் பகுதியி்ல் வசித்து வந்த டெரன்ஸ் பெர்னாண்டோ (36) என்ற ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இரவு பணிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் விடுதியினை சோதனையிட்ட போதே அவரது உடல் நீச்சல் தடாகத்தின் உள்ளே இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த நீர்கொழும்பு நீதிமன்ற பதில் நீதவான் இந்திக டி சில்வா சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
