மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டது
மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி சனிக்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
ராணி மனைவி கமிலாவும் மன்னருடன் சேர்ந்து வரலாற்று விழாவில் முடிசூட்டப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரணடாம் எலிசபெத் மகாராணி காலமானதை அடுத்து சார்லஸ் மன்னர் மன்னரானார். மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த ஆடம்பரம் மற்றும் சடங்குகளுடன், ராஜா இறையாண்மையாக மூடிசூடப்பட்டு அவரது தலையில் கிரீடம் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு பின்னர் முடிசூட்டு விழா முறையாக இடம்பெறவுள்ளது.
இறுதியாக ஜூன் 1953 இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூடிசூட்டு விழா இடம்பெற்றிருந்தது.
அதி கூடிய வயதில் மன்னராக முடிசூடும் சந்தர்ப்பம்
மே 1 திங்கள் அன்று வங்கி விடுமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், முடிசூட்டு விழாவை முன்னிட்டு வார இறுதியில் கூடுதல் வங்கி விடுமுறை சேர்க்கப்படுமா அல்லது மாற்றப்படுமா என்பது அறிவிக்கப்படவில்லை.
பக்கிங்ஹாம் அரண்மனை இந்த விழா பழங்காலத்தையும் நவீனத்தையும் இணைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மன்னர் முடிசூடும் போது அவருக்கு 74 வயதாகிவிடும். புதிய மன்னர் ஒருவர் அதி கூடிய வயதில் முடிசூடிக்கொள்வது இது முதன்முறையாகும்.
900 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேன்டர்பரி பேராயர் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு தலைமை தாங்குவார்.
மில்லியன் கணக்காக மக்கள் தொலைகாட்சியில் பார்வையிட வாய்ப்பு
ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீடித்தது, ஆனால் அடுத்த ஆண்டு விழா குறுகியதாகவும், பமிகக் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் இருக்கும் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னர்கள் பாரம்பரியமாக 14 ஆம் நூற்றாண்டின் கிங் எட்வர்டின் நாற்காலியில் அமர்ந்து, 17 ஆம் நூற்றாண்டின் செயின்ட் எட்வர்ட் கிரீடத்தால் திடமான தங்கத்தால் முடிசூட்டப்படுகிறார்கள்.
இதனிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு, மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சி ஊடாக காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
