காற்றில் பரவும் கொரோனா வைரஸ் திரிபு இலங்கையில்
காற்றின் மூலம் பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ள கோவிட் வைரஸின் புதிய உருமாறிய திரிபு இலங்கைக்குள் வந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இதனால், வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எப்போதும் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணியுங்கள்.
புதிய வைரஸின் நோய் அறிகுறிகள் அதிகம் வெளிப்படும். இளையோருக்கு இந்த நோய் அறிகுறிகள் அதிகளவில் தென்படும் எனவும் நீலிகா மலவிகே குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.