இலங்கையில் பயன்பாட்டிற்கு வந்த கொரோனா தடுப்பூசி! தொற்று நோய் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்கள் நோய்த்தடுப்பு திட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். "அனைத்து ஊழியர்களும் ஒரே உற்சாகத்தைக் காட்டினர். தடுப்பூசி திட்டம் இன்று முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இடம்பெறும்.
இதன்படி, இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று அவர் கூறினார்.
இதேவேளை, இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இலங்கையர்களுக்கு நேற்று போடப்பட்டது.
நேற்றைய தினத்தில் 5286 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.