வெள்ளை கோட்டில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட்
பாணந்துறையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் வைரஸ் தொற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுகுருந்த பிரதேசத்தில் வெள்ளை கோட்டில் சென்ற பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே விபத்தக்குள்ளாகியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்று நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், கட்டுகுருந்த பகுதியை சேர்ந்த 35 வயதான பிரியந்தி பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.