திருமலையில் மேலும் தனியார் வங்கி ஊழியரொருவருக்கு கொரோனா
தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட திஸ்ஸபுர பகுதியில் 24 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இன்று மாலை இத்தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றி வந்த 24 வயதுடைய இளைஞனுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை நகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வோர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கைது செய்யப்படும் நபர்களுக்கு கட்டாயம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
