இலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கோவிட் -19! ஜயசுமன தகவல்
இலங்கையில் இளம் வயதினருக்குக் கோவிட் -19 வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் தினசரி கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், மாறுபாட்டுக்கு உள்ளான கோவிட் -19 தொற்று நாட்டுக்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும், வார இறுதியில் வெளியிடப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே அதனைக் கூறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam