இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வு!
இலங்கையில் மேலும் 42 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1608 ஆக உயிர்ந்துள்ளது.
மே 11ம் திகதி முதல் இன்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மூன்று கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
மே 11ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரையில் 39 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, 11, 14, 15, 17 மற்றும் 20ம் திகதிகளில் தலா ஒருவரும், 23ம் திகதி இருவரும், 23, 24, 26, 28 மற்றும் 29ம் திகதிகளில் தலா ஒருவரும், 30ம் திகதி மூவரும், 31ம் திகதி 11 பேரும், ஜூன் 1ம் திகதி 11 பேரும், 2ம் திகதி மூவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 17 பெண்களும், 25 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri