விகாரை ஒன்றில் 17 பிக்குமாருக்கு கோவிட் தொற்று
ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள த்பே புலனிதலாராம விகாரையில் வசித்து வரும் 17 பௌத்த பிக்குகளுக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளமை பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பிமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
விகாரையின் விகாராதிபதிக்கு முதலில் கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
இதன் பின்னர் ஏனைய பிக்குமாருக்கு நடத்திய பரிசோதனைகளில் 16 பேருக்கு கோவிட் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிக்குகள் மருத்துவச் சிகிச்சைக்காக பூசா கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.