திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (02) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில்,திருகோணமலை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,இன்றைய தினம் சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய தாதியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வைத்தியசாலைக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து வருமாறும், சமூக
இடைவெளிகளை பேணுமாறும், மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும்
திருகோணமலை சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan