திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (02) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில்,திருகோணமலை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருகின்றது.

பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்குள் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,இன்றைய தினம் சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 26 வயதுடைய தாதியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே வைத்தியசாலைக்கு வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்து வருமாறும், சமூக
இடைவெளிகளை பேணுமாறும், மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும்
திருகோணமலை சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam