வல்வை ஆதிகோயிலடியில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று
யாழ்.வடமராட்சி, வல்வெட்டித்துறையில் இன்று 39 பேர் உட்பட இரண்டு நாட்களில் 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் இன்று பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் 32 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
