இலங்கையில் சடுதியாக உயர்ந்த கோவிட் மரணங்கள்!
இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1243 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 17ம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 17ம் திகதி ஒருவரும், 19ம் திகதி மூவரும், 20ம் திகதி இருவரும், 21ம் திகதி நால்வரும், 22ம் திகதி 10 பேரும், 23ம் திகதி எட்டு பேரும், 24ம் (இன்று) ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று 2,970 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 167,171 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,296 பேர் இன்று (24) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139,947 ஆக அதிகரித்துள்ளது.