கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது
நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.
நாட்டில் மேலும் நான்கு கோவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக உயர்வடைந்துள்ளது.
1. மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 11ம் திகதி தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு, கோவிட் நிமோனியா மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
2. அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர், நேற்றைய தினம் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய், நீரிழிவு, தைரோய்ட், இரத்தம் விசமாகியமை மற்றும் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளார்.
3. நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்று, இரத்தம் விசமாகியமை மற்றும் நுரையீரல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
4. காலி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கடந்த 11ம் திகதி தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா மற்றும் லுகேமியா நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத்தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.