இலங்கையில் மீண்டும் குவியும் கொரோனா சடலங்கள்
கோவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு ஏற்றுக்கொள்வதில்லை என தகனக் கூடங்களில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, உடல்களை ஏற்க மறுப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தகன நடவடிக்கைகளுக்கு தேவையான 37.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை மேற்கொண்டு கோவிட் தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் தகனம் செய்வதற்கு எரிவாயு இல்லை என்பதனால் சடலங்களை ஏற்றுக் கொள்ள முடியாதென கூறப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.