ரணிலுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சம்பிக்க வேண்டுகோள்
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவும் பொருளாதார நெருக்கடியும்
"இதற்கு முன்னரும் 2001ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது ரணில் விக்ரமசிங்கவால் அதனை வெற்றிகொள்ள முடிந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் அவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
அதற்கு அனைவரும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பாரிய
எதிர்ப்பு வெடிக்கும்" என்றும் எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 2 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
