குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காண்பதில் சிக்கல்
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கொண்டு அவர்கள் யார் என்று அடையாளம் காண்பது மிகவும் கடினமானதாக இருந்தாலும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்த விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபின் ராவத், (Bipin Rawat) மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லித்தர் ஆகியோரது உடல்கள் மட்டுமே இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் அறியப்படும் வரை அந்த உடல்கள் டெல்லியில் உள்ள ஆர்மி பேஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும். "அறிவியல்பூர்வமான முயற்சிகள் மட்டுமல்லாது உடல்களை அடையாளம் காண்பதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உதவியும் நாடப்படும் எனவும் எந்த உடல் யாருடையது என்று அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது குடும்பத்திடம் இறந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்படும் " என்று இந்திய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் உறவினர்களுக்கு இது ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் எந்த உடல் யாருடையது என்பதை அடையாளம் காண்பதற்குத் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
may you like this Video