ஜனாதிபதி மாளிகையில் 2000 பேருக்கு வழங்கப்பட்ட விருந்தால் சர்ச்சை
அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த 19ஆம் திகதி 2000 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் நிகழ்வு ஒன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் மீண்டும் 2000 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவா ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் பிசீஆர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதாக பிரசன்ன குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
