ஜனாதிபதி மாளிகையில் 2000 பேருக்கு வழங்கப்பட்ட விருந்தால் சர்ச்சை
அனுராதபுரம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விருந்து தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த 19ஆம் திகதி 2000 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் நிகழ்வு ஒன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் மீண்டும் 2000 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட்டுள்ளது. இதுவா ஒரு நாடு ஒரு சட்டம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் பிசீஆர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பதாக பிரசன்ன குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri