நாட்டு மக்களுக்கு தொடரும் சோகம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பொருட்கள் கடைகளில் உள்ளது. அதில் விலை குறைப்பு பெறுவது கடினம். புதிதாக பொருட்கள் இறக்குமதி செய்து அதன் மூலம் விலை குறைப்புகள் செய்யப்படலாம். ஆனால் அதற்கு தாமதம் ஏற்படும்.
அரசாங்கத்திற்கு செய்ய முடிந்ததனை முழுமையாக செய்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு சலுகை கிடைக்கும் வகையில் பொருட்களின் விலை குறைய சில காலங்களாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு மகிந்தவிற்கு கடும் அழுத்தம்! - நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan