ரஞ்சனுக்கு எதிரான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்துக்களில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சட்டமா அதிபர் ராமநாயக்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (3) நீதிபதிகள் எஸ்.துரைராஜா, எச்.எம்.டி.நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் திட்டத்தைப் பின்பற்றி வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பாடநெறிகளை இணையத்தில் அணுகுவதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை சிறைச்சாலை அதிகாரிகளிடம் முன்வைக்குமாறும், அனுமதி வழங்கப்படுமாயின் நீதிமன்றத்திற்கு மோஷன் மூலம் அறிவிக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam