அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழங்கு, பருப்பு, உப்பு, சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இவ்வாறு தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கான பற்றாக்குறையே இவ்வாறு உணவுப்பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதற்கும் அதுவே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலருக்கான பற்றாக்குறை பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri