அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழங்கு, பருப்பு, உப்பு, சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இவ்வாறு தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கான பற்றாக்குறையே இவ்வாறு உணவுப்பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
சந்தையில் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதற்கும் அதுவே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலருக்கான பற்றாக்குறை பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 48 நிமிடங்கள் முன்
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam