தூதரகப் பிரிவு திங்கள் முதல் வெள்ளி வரை திறந்திருக்கும்:வெளியுறவு அமைச்சகம்
தூதரகப் பிரிவு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தூதரக சேவைகளுக்கான பாரிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்திய தூதரக அலுவலகங்கள்
யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.