யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த கோரிக்கை
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு சூழல் பாதுகாப்பு அமைப்பொன்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வனசீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பே குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள குறித்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எதுவித சூழல்ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆய்வு
கரையோரப் பாதுகாப்பு சட்டமூலத்தின் பிரகாரம் கரையோரத்தை அண்டிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதற்காக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியும் பெறப்படவேண்டும். ஆனால் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இவ்வாறான எதுவித நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.அதன்காரணமாக இந்நாட்டுக்கு தனித்தன்மை வாய்ந்த சூழல் கட்டமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
அதன் காரணமாக மண்டைதீவின் கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை அடியோடு இடைநிறுத்துமாறு குறித்த அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




