யாழ். அராலியில் ஆலயத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம்-அராலியில் உள்ள கோயில் மண்டபத்திலிருந்து முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்றையதினம்(19) அராலி -வீரபத்திரர் கோயில் மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முருகேசு அராலியைச் சேர்ந்த கணேசலிங்கம் (வயது 81) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மதியம் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்றுள்ள நிலையில் ஆலய மண்டபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.




