கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள சதி அம்பலம்

Sri Lanka Army Sri Lanka Police Gotabaya Rajapaksa Government Of Sri Lanka
By Sivaa Mayuri Mar 08, 2024 06:46 AM GMT
Report

செல்வாக்கு மிக்க வெளிநாட்டு நிறுவனங்கள், சில உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றும் நோக்கில் செயற்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் கிடைக்கும் கோட்டாபய ராஜபக்சவின் “என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற நூலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அந்த புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“கணிசமான நிதி ஆதரவால் என்னை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேலும் வலுப்பெற்றதோடு வெளிநாட்டு சக்தி ஒன்று என்னை பதவி விலக வேண்டாம் என கடுமையாக வலியுறுத்தியிருந்தது.

சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்த கோட்டாபய எழுதிய புத்தகம்

சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்த கோட்டாபய எழுதிய புத்தகம்

மிரிஹான போராட்டம்

இந்த வெளிநாட்டு நிறுவனம் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.

சில செல்வாக்குமிக்க நாடுகள் உலக அரங்கில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் வெற்றியாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றன.

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள சதி அம்பலம் | Conspiracy Against Gotabaya Rajapaksha

மிரிஹானவில் உள்ள எனது இல்லத்திற்கு வெளியே 2022 மார்ச் 31ஆம் திகதியன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது.

அதேவேளை, இரவு 8:00 மணியளவில் பங்கிரிவத்தை வீதியை அடைந்த ஊர்வலத்தில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கொழும்பில் உள்ள சங்ரிலா விருந்தகத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் அனைத்து ஆயுதப் படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

பிறப்பிக்கப்படாத உத்தரவு

இந்நிலையில், சவேந்திரா மற்றும் கமல் இருவரிடமும் குறித்த நிலைமை குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஸ் சாலியும் மிரிஹான பகுதிக்கு விஜயம் செய்தார்.

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள சதி அம்பலம் | Conspiracy Against Gotabaya Rajapaksha

அவர் அங்கு சென்றபோது, ஏறக்குறைய நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் இருந்த போதிலும், கூட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெளிப்படையான அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதன்போது, சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன ஆகியோருடன் சுரேஸ் சாலி வீடியோ அழைப்பை மேற்கொண்டார். எனினும் துரதிர்ஷ்டவசமாக, கூட்டத்தை கலைப்பதற்கான எந்த உத்தரவும் மூத்த அதிகாரிகளிடமிருந்து அனுப்பப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் கூற்றுப்படி, மறுநாள் முற்பகல் 10.30 மணியளவில் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி, பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு தமது செயற்பாட்டு அறையை மாற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கு நான் அறிவுறுத்தினேன்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதி

2022 மே 9ஆம் திகதி, இரவு அலரிமாளிகையில் பிரதமரை வெளியேற்றுவதில், மன்னிக்க முடியாத காலதாமதம் ஏற்பட்டதால், அனைத்து பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தோம்.

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி காலை, ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்பாட்டு அறையில், பாதுகாப்புச் செயலாளர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் அதிபர் மற்றும் புலனாய்வுத்துறையின் இயக்குநர் ஆகியோர் இருந்தனர்.

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள சதி அம்பலம் | Conspiracy Against Gotabaya Rajapaksha

அனைத்து அணுகு சாலைகளையும் மறித்து போராட்டக்காரர்கள் கொழும்புக்கு வருவதைத் தடுக்க இதன்போது திட்டமிடப்பட்டது எனினும், அத்தகைய சாலைத் தடைகள் எதுவும் நிறுவப்படவில்லை.

எனவே, எதிர்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையில் கிட்டத்தட்ட எதிர்ப்பின்றி குவிந்தனர். மூழ்கும் கப்பலை தாம் தனியாக கைவிட்டதாக சிலர் கூறினாலும், தாம் பதவி விலகும் போது இலங்கை வீழ்ச்சியடைந்த நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது.

2022 மார்ச் - ஏப்ரலில் தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு உன்னிப்பாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதியை நான் எதிர்கொண்டேன்.

இந்த சூழ்நிலையில், தனது பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக ஒரு உயிரை தியாகம் செய்வது வீண் என்று நான் கருதினேன்”  என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர்: வெளியான காரணம்

கோட்டாபய ராஜபக்சவினால் பெரும் ஏமாற்றத்தில் பலர்: வெளியான காரணம்

புதிய ஜனாதிபதி விடயத்தில் குழப்பத்தில் இந்தியா

புதிய ஜனாதிபதி விடயத்தில் குழப்பத்தில் இந்தியா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US