பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்த வாழ்த்து செய்தி
இலங்கை இன்று (04) 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ் இலங்கை ஜனாதிபதிக்கும் இலங்கை மக்களுக்கும் சிறப்பு வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
ஆழமான வரலாற்று உறவு
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான "நீண்டகால கூட்டாண்மை" மற்றும் "ஆழமான வரலாற்று உறவுகளை" வலியுறுத்தி, இலங்கைக்கு தனது "அன்பான வாழ்த்துக்களை" மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கை சமூகம் ஆற்றிய முக்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.
கல்வி, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினையும் பாராட்டியுள்ளார்.