ஆபிரிக்காவில் அரசுக்கெதிரான கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்! அதிகரி்த்துள்ள பலி எண்ணிக்கை
ஆபிரிக்க நாடான கோங்கோவில் கோமாண்டா நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்றையதினம் (27) ஆயுதங்களுடன் புகுந்த கும்பலொன்று அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
உயிருக்கு பயந்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளார்கள்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை
மேலும் அந்த கும்பல் அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்ததனர் அதில் வீடுகள், கடைகள் எரிந்து சேதமானது.
இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக தேவாலயம் அருகில் உள்ள மக்சோஸ்கனி கிராமத்தில்இந்த கும்பல் நடத்திய தாக்குதலில் 5 பேர் இறந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
கோமாண்டா நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டையில் இருந்து வந்த இந்த கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
[64GC45ஸ
அரசுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவ்வப் போது இவர்கள் பொதுமக்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri
