வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்பம்? கொழும்பு ஊடகம் தகவல்
வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
எனினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வட மாகாண ஆளுநரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டிருந்தார். கல்கிசையில் உள்ள, வட மாகாண ஆளுநரின் கொழும்பு காரியாலயத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது அவர் பதவி மாற்றம் குறித்தோ, அல்லது பதவி விலகுவது குறித்தே எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பதவி மாற்றம் குறித்து தமது அலுவலகத்துக்கோ, ஆளுநருக்கோ எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கப்பெறவில்லை என வட மாகாண ஆளுநரின் இணைப்பதிகாரி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநராக தொடர்ந்தும் பீ.எஸ்.எம்.சார்ள்ஸே செயற்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
